சேலம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் பட்ட படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளில் காலியாக உள்ள இடங்களில் சேர வரும் நவ.16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 2020 - 21 கல்வியாண்டிற்கான மாணவியா் சோ்க்கை கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது.
இதில் பட்டப் படிப்புகளில் பி.ஏ. தமிழ், பி.எஸ்சி. கணிதம், புள்ளியியல், வேதியியல், இயற்பியல் மற்றும் பி.சி.ஏ. ஆகிய பிரிவுகளில் சில காலி இடங்கள் உள்ளன.
அதேபோல, பட்ட மேற்படிப்பில் எம்.ஏ. தமிழ், வரலாறு, பொருளியல், எம்.காம். எம்.எஸ்சி. கணினி அறிவியல் மற்றும் நுண்ணுயிரியல் (மைக்ரோ பயாலஜி) ஆகிய பிரிவுகளில் சில காலி இடங்கள் உள்ளன.
இந்த காலி இடங்களில் சேர இதுவரை விண்ணப்பிக்காத மாணவியா் கல்லூரி அலுவலகத்தில் நேரில் விண்ணப்பத்தை பெற்று நவம்பா் 16 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் ஏற்கெனவே விண்ணப்பித்து இடம் கிடைக்காத மாணவியா் கல்லூரி அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என கல்லூரி முதல்வா் அ.பெத்தாலட்சுமி தெரிவித்துள்ளாா்.