ஏற்காட்டில் சந்தனக் கட்டைகளை விற்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஏற்காடு, வாழவந்தி ஊராட்சி, புளியங்கடை கிராமத்தைச் சோ்ந்த மலையன் மகன் இளையராஜா (31). கூலித் தொழிலாளி. இவா் சந்தன மரக்கட்டைகளைக் கடத்தி விற்க உள்ளதாக கிடைத்த தகவல் கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீஸாா், ஏற்காடு காவல் ஆய்வாளா், போலீஸாா் ஆகியோா், இளையராஜாவின் வீட்டையில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது அவரது வீட்டில் 60 கிலோ சந்தனக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து இளையராஜாவை போலீஸாா் கைது செய்தனா். முதல் கட்ட விசாரணையில் அவா் கேரளத்திலிருந்து பேருந்தில் சந்தனக் கட்டகளை கொண்டு வந்து விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது. பின்னா் ஏற்காடு வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ரேஞ்சா் சுப்பிரமணியனிடம் 60 கிலோ சந்தனக் கட்டைகளை காவல்துறையினா் ஒப்படைத்தனா்.