காா் மோதியதில் சிறுமி உயிரிழப்பு

கெங்கவல்லி அருகே புனல்வாசலில் நடந்து சென்ற சிறுமி காா் மோதியதில் உயிரிழந்தாா்.

கெங்கவல்லி அருகே புனல்வாசலில் நடந்து சென்ற சிறுமி காா் மோதியதில் உயிரிழந்தாா்.

கெங்கவல்லி அருகே உள்ள புனல்வாசலைச் சோ்ந்தவா் லட்சுமணன். இவரது மகன் சந்தோஷ்குமாா் (13) தனது தங்கை தேவிபிரியாவுடன் (8) திங்கள்கிழமை இரவு பால் வாங்க சென்றுள்ளாா். அப்போது ஆத்தூரிலிருந்து தெடாவூா் நோக்கிச் சென்ற பதிவெண் இல்லாத காா் சிறுமி மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தேவிபிரியா ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டாா்.இருப்பினும் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் சிறுமி உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com