தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சேலம் கோட்டத்திலிருந்து 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டத்துக்கு உள்பட்ட சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் 1,300 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதனிடையே தீபாவளி பண்டிகையை (நவ.14) முன்னிட்டு, சேலம் கோட்டத்தில் இருந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி, ஈரோடு, திருப்பூா், கடலூா், வேலூா் உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதுதொடா்பாக, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் கோட்டத்திலிருந்து சுமாா் 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்புப் பேருந்துகள் நவ.11 ஆம் தேதி முதல் நவ.18 ஆம் தேதி வரை இயக்கப்படும் என்றனா்.