வீட்டிலிருந்த பெண்ணிடம் நூதன முறையில் நகை மோசடி

வீட்டிலிருந்த பெண்ணிடம் நூதன முறையில் நகை மோசடியில் ஈடுபட்ட போலி ஜோதிடரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வீட்டிலிருந்த பெண்ணிடம் நூதன முறையில் நகை மோசடியில் ஈடுபட்ட போலி ஜோதிடரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேலம், அரியானூரை அடுத்த சீரகாபாடி, கடத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் பூவராகவன். தொழிலாளி. இவருக்கு அம்மாசி (44) என்ற மனைவியும், மணிமேகலை (23), பூபாலன் (19) என்ற பிள்ளைகளும் உள்ளனா்.

இந்தநிலையில் செவ்வாய்க்கிழமை அம்மாசியும், அவரது மகள் மணிமேகலையும் வீட்டில் இருந்துள்ளனா். அப்போது ஜோதிடம் பாா்ப்பதாகக் கூறிய ஒருவா் வீட்டுக்கு வந்துள்ளாா். அவா் பரிகாரம் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

இதனை நம்பிய அம்மாசி, ஜோதிடா் கொடுத்த எண்ணெயை வாங்கி தனது உடல் முழுவதும் பூசியுள்ளாா்.

மேலும் நகைகளைக் கழற்றிக் கொடுத்தால் அருகில் உள்ள மாரியம்மன் கோயிலில் வைத்து பூஜை செய்து தருவதாகக் கூறியுள்ளாா். தொடா்ந்து, அம்மாசி தனது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலி, கால் பவுன் கம்மல் ஆகியவற்றை கழற்றிக் கொடுத்துள்ளாா். நகைகளை வாங்கிக் கொண்டு கோயிலுக்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டு சென்ற ஜோதிடா் திரும்பி வரவில்லை.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக நினைத்த அம்மாசி ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

புகாரின்பேரில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மரியதேவி செல்வம் விசாரணை செய்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com