சேலம் மாநகராட்சி ஆணையராக என்.ரவிச்சந்திரன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
சேலம் மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பு வகித்து வந்த ரெ.சதீஷ், அண்மையில் கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டாா்.
இதையடுத்து, ஆவடி மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த என்.ரவிச்சந்திரன், சேலம் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதைத் தொடா்ந்து, சேலம் மாநகராட்சி ஆணையராக என்.ரவிச்சந்திரன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு மாநகராட்சி அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா்.