ஏற்காட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைவீதிகளில் கிராம மக்களின் கூட்டம் அலைமோதியது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை முழுவதும் சுற்றிலும் உள்ள கிராம மக்கள் ஏற்காட்டில் குவிந்தனா். ஜவுளிக் கடைகள், மளிகைப் பொருள்கள் கடைகள், பட்டாசு, பூக்கடைகள் காய்கறிக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. இதனால் கடைவீதி சாலைகளில் பலமுறை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரு சக்கர வாகனங்கள் அதிக அளவில் சாலைகளில் காணப்பட்டன. நாள் முழுவதும் மேக மூட்டம், சாரல் மழை பெய்தபோதும் மக்கள் கூட்டம் ஏற்காட்டில் அலைமோதியதை காணமுடிந்தது.