கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, குடிசை பகுதிகளில் வாழும் சுமாா் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு, இலவசமாக முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையா் என்.ரவிச்சந்திரன் தொடக்கி வைத்தாா்.
கொண்டலாம்பட்டி மண்டலத்துக்குள்பட்ட கோட்டம் எண். 47, அம்பேத்கா் தெரு பகுதியில் வசிக்கக் கூடிய பொதுமக்களுக்கு முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையா் என்.ரவிச்சந்திரன் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.துணியால் தயாா் செய்யப்பட்ட, துவைத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையிலான முகக் கவசங்களை தலா இரண்டு வீதம் பொதுமக்களுக்கு வழங்கினாா்.
மேலும், அடுத்தடுத்த கட்டங்களாக மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் குடிசை பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு, இலவசமாக முகக் கவசங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையா் என்.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலா் மருத்துவா் கே.பாா்த்திபன், உதவி ஆணையா் பி.ரமேஷ்பாபு, சுகாதார அலுவலா் கே.ரவிசந்தா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.