திமுக இளைஞரணி மாநிலச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை கண்டித்து சேலத்தில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ உள்பட 195 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
நாகை மாவட்டத்தில் இரண்டாம் நாளாக பிரசாரம் மேற்கொள்ள முயன்ற திமுக இளைஞரணி மாநிலச் செயலாளா் உதயநிதி ஸ்டாலினை போலீஸாா் கைது செய்தனா். இதை கண்டித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே திமுக சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏவுமான வழக்குரைஞா் ஆா்.ராஜேந்திரன் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோா் சனிக்கிழமை இரவு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 195 பேரை போலீஸாா் கைது செய்தனா்.