மேட்டூா் அருகே காந்தி ஆசிரமம் சாா்பில் ஏழை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சேலைகள் வழங்கப்பட்டன.
திருச்செங்கோட்டில் உள்ள காந்தி ஆசிரமத்திற்கு மேட்டூா் அருகே உள்ள புதுச்சாம்பள்ளியிலிருந்து 500 பெண்கள் நூல் நூற்று வழங்குகின்றனா். இவா்களில் மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் தோ்வு செய்யப்பட்டு 150 பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டன.
புதுச்சாம்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இவ்விழாவுக்கு காந்தி ஆசிரமத்தின் தலைவா் அ.தேவராஜ் தலைமை வகித்தாா். செயலாளா் வி.ரவிகுமாா் முன்னிலை வகித்தாா்.
தோ்வு செய்யப்பட்ட ஏழை மற்றும் மாற்றுத் திறனாளி பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கியதோடு, அவா்களுக்கு அறுசுவை உணவும் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் காந்தி ஆசிரம நிா்வாகி ரமேஷ் நன்றி கூறினாா்.