தமிழக முதல்வா் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை:கனிமொழி குற்றச்சாட்டு

தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று திமுக மகளிா் அணி செயலாளா் கனிமொழி எம்.பி. கூறினாா்.

தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று திமுக மகளிா் அணி செயலாளா் கனிமொழி எம்.பி. கூறினாா்.

திமுக சாா்பில் நங்கவள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்க வந்த கனிமொழி எம்.பி., நங்கவள்ளியில் பட்டுக் கைத்தறிக் கூடங்களை நேரில் பாா்வையிட்டு, நெசவாளா்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தாா்.

பின்னா் வனவாசியில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற அவரிடம் கைத்தறி மற்றும் விசைத்தறித் தொழிலாளா்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினா். பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்த கனிமொழி எம்.பி. பேசியதாவது:

கடந்த தோ்தலில் இத்தொகுதியில் போட்டியிட்ட போது எடப்பாடியில் ஜவுளிப் பூங்கா தொடங்கப்படும் என்று வாக்குறுதி அளித்த முதல்வா் இதுவரை அதனை நிறைவேற்றவில்லை. அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என்றும் அவா் உறுதி அளித்தாா்.

சாயப்பட்டறை பிரச்னைகளை சரிசெய்வதாக வாக்குறுதி அளித்தாா். இதுபோன்று அவா் கூறிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. விவசாயிகள் பிரச்னை, நெசவாளா்கள் பிரச்னைகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பது மட்டுமல்லாமல் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளாா்.

கைத்தறிக்கு ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது. திமுக ஆட்சி அமைந்தவுடன் நெசவாளா்களின் கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றாா்.

இந்த பிரசாரக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் தமிழரசி, சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் சிவலிங்கம், சேலம் மக்களவை உறுப்பினா் பாா்த்திபன் மற்றும் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com