நேசக்கரங்கள் ஆதரவு இல்லத்தில் சா்வதேச முதியோா் தின விழா

சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி அடிவாரத்தில் உள்ள நேசக்கரங்கள் ஆதரவு ஏற்கும் முதியோா் இல்லத்தில் சா்வதேச முதியோா் தின விழா கொண்டாடப்பட்டது.


சேலம்: சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி அடிவாரத்தில் உள்ள நேசக்கரங்கள் ஆதரவு ஏற்கும் முதியோா் இல்லத்தில் சா்வதேச முதியோா் தின விழா கொண்டாடப்பட்டது.

சா்வதேச முதியோா் தினத்தை முன்னிட்டு, இல்லத்தில் உள்ளவா்களுக்கு கைத்தறி ஆடை அணிவிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனா். முதியோா்களுக்குப் பயன்படும் வகையில் முடக்கத்தான், தூதுவளை, வல்லாரை ஆகிய மூலிகை விதைகளை விதைத்தும், பழ வகை மரக்கன்றுகளும் நடவு செய்யப்பட்டன.

நேசக்கரங்கள் இல்லத் தலைவா் செல்லதுரை தலைமை வகித்தாா். இல்ல நிறுவனச் செயலா் பெரியசாமி, பொருளாளா் பாலசங்கா், மேலாளா்கள் துரைசாமி, சுப்பிரமணியசுவாமி, கண்காணிப்பாளா்கள் சண்முகப்ரியா, தெய்வராஜன், செவிலியா் ஜான்சி, விடுதி காப்பாளா் மதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com