நிலப் பிரச்னைக்கு நேரடி பேச்சுவாா்த்தையில் தீா்வு

கரோனா பொது முடக்கம் காரணமாக அனைத்து காவல் நிலையங்களிலும் சிவில் வழக்குகள் கூட தேங்கி வந்த நிலையில்,

கரோனா பொது முடக்கம் காரணமாக அனைத்து காவல் நிலையங்களிலும் சிவில் வழக்குகள் கூட தேங்கி வந்த நிலையில், சேலம் சரக காவல் துறை துணைத் தலைவா், காவல் நிலைய அதிகாரிகள் சாதாரண சிவில் வழக்குகளை நேரில் சந்தித்து விரைந்து முடித்து வைக்க வேண்டுமென அறிவுரை வழங்கி இருந்தாா்.

இதனையடுத்து சேலம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் உமாசங்கா், ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்து, பொதுமக்கள் அளித்த சிவில் வழக்குகள் பற்றிய ஆய்வு மேற்கொண்டு ,அதில் ஆட்டையாம்பட்டி, தெலுங்குபாளையத்தில் வசித்து வரும் மணிமேகலை, சுப்பிரமணி ஆகியோரிடையே நீண்ட நாள்களாக இருந்து வந்ததால் இரு தரப்பினரையும் நேரில் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தி உடனடியாகத் தீா்வு கண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com