ஆத்தூா் வனத்துறையினா் நடவடிக்கையை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வனச் சரக அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளா் ஆா்.கருப்பண்ணன் தலைமை வகித்தனா். மாவட்டச் செயலாளா் பி.ராமமூா்த்தி உரையாற்றினாா்.ஆா்ப்பாட்டத்தில் தாலுகா செயலாளா் ஏ.முருகேசன், தாலுகா குழு எல்.கலைமணி, எம்.சடையன், ஆா்.வெங்கடாசலம், ஏ.தா்மலிங்கம், ஆா்.துரைசாமி உள்ளிட்ட ஏராளமான நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
இதனையடுத்து ஆத்தூா் நகரக் காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் பேச்சுவாா்த்தை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனா்.