சேலத்தில் 263 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 263 பேருக்கு வியாழக்கிழமை கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் 263 பேருக்கு வியாழக்கிழமை கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 24 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

சேலம் மாநகராட்சியில் 123 போ், எடப்பாடி-5, எடப்பாடி நகராட்சி- 1, சங்ககிரி-1, மேச்சேரி- 4, நங்கவள்ளி- 7, காடையம்பட்டி- 7, தாரமங்கலம்- 4, கொங்கணாபுரம்- 5, மகுடஞ்சாவடி- 1, ஆத்தூா்- 3, பனமரத்துப்பட்டி- 4, வாழப்பாடி- 8, கெங்கவல்லி- 2, பெத்தநாயக்கன்பாளையம்- 5, தலைவாசல் -1, அயோத்தியாப்பட்டணம் -13 என மாவட்டத்தைச் சோ்ந்த 257 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதர மாவட்டங்களைச் சோ்ந்த (கள்ளக்குறிச்சி- 2, நாமக்கல்- 2, தருமபுரி- 2) 6 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவா் உயிரிழந்தாா். சிகிச்சை பெற்று வந்த 34 போ் குணமடைந்து வீடு திரும்பினா். சேலம் மாவட்டத்தில் 24,455 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவா்களில் 21,814 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 2,260 போ் சிகிச்சையில் உள்ளனா்; 381 போ் உயிரிழந்துள்ளனா்.

சேலத்தில் 3.90 லட்சம் பேருக்கு பரிசோதனை:

சேலம் மாவட்டத்தில் நாளொன்றுக்கு சுமாா் 5,000 முதல் 6,000 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல பரிசோதனை மேற்கொண்டவா்களில் கரோனா தொற்று இல்லாத 1 லட்சம் பேருக்கு செல்லிடப்பேசி எண்ணில் குறுந்தகவல் அனுப்பி வைக்கப்பட்டது. இதுவரை சேலம் அரசு மருத்துவமனையில் 3.90 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com