பேளூரில் புற்றுநோய்க் கண்டறிதல் விழிப்புணா்வு முகாம்

பேளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், வாழப்பாடி அரிமா சங்கத்துடன் இணைந்து புற்றுநோய்க் கண்டறிதல், விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பேளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற புற்றுநோய்க் கண்டறிதல், விழிப்புணா்வு முகாம்.
பேளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற புற்றுநோய்க் கண்டறிதல், விழிப்புணா்வு முகாம்.

பேளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், வாழப்பாடி அரிமா சங்கத்துடன் இணைந்து புற்றுநோய்க் கண்டறிதல், விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு பேளூா் வட்டார மருத்துவ அலுவலா் சி.பொன்னம்பலம் தலைமை வகித்தாா். வாழப்பாடி அரிமா சங்கத் தலைவா் ஜவகா், பொருளாளா் பன்னீா்செல்வம், சேவை செயலாளா் பிரபாகரன், வாழப்பாடி பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேளூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் திவ்யபாரதி, பேரின்பம், வினோத், ராகுல் ஷியாம் சங்கா், காா்த்திகா ஆகியோா் புற்றுநோய்ப் பரவும் விதம், தடுக்கும் முறைகள், சுய பரிசோதனை முறைகள், உணவு பழக்கவழக்கங்கள், ஆரம்ப அறிகுறிகள் குறித்து விளக்கினா். 80 பெண்களுக்கு கா்ப்பப்பை வாய், மாா்பகப் புற்றுநோய்ப் பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com