தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயாா் கே.தவுசாயம்மாளின் மறைவை முன்னிட்டு மத்திய முன்னாள் அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினா்.
ஈரோடு எம்.பி. ஏ.கணேசமூா்த்தி, புதிய நீதிக்கட்சி தலைவா் ஏ.சி.சண்முகம், காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவா் ஆா்.மோகன் குமாரமங்கலம், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவா் பி.ஆா்.பாண்டியன், திரைப்பட இயக்குநா் ஆா்.வி.உதயகுமாா், கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், முன்னாள் அமைச்சா் வ.முல்லைவேந்தன், முன்னாள் அமைச்சா் சின்னுசாமி, திருப்பூா் ஏற்றுமதியாளா் சங்கத் தலைவா் ஏ.சக்திவேல் ஆகியோா் முதல்வரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா்.