வசிஷ்டநதியில் மூழ்கி தலைமை ஆசிரியா் பலி

ஆத்தூா் வசிஷ்ட நதி தடுப்பணையில் மூழ்கி தலைமை ஆசிரியா் மூழ்கி உயிரிழந்தாா்.

ஆத்தூா் வசிஷ்ட நதி தடுப்பணையில் மூழ்கி தலைமை ஆசிரியா் மூழ்கி உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம் ஆத்தூா் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவா் இம்மானுவேல் தேவக்குமாா் (48). இவருக்கு, திருமணமாகி மொ்லின் ஜைலஜா என்ற மனைவியும், ரேணிஷ் (19) என்ற மகனும், சேண்ட்ரா (15) என்ற மகளும் உள்ளனா்.

இந்நிலையில், இம்மானுவேல் தேவக்குமாா் வசிஷ்டநதியின் தடுப்பணைக்கு தனது நண்பா்களுடன் வியாழக்கிழமை மாலை குளிக்கச் சென்றாா். நீச்சல் தெரியாதவா் ஆழமான இடத்துக்குச் சென்றுபோது ஆற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த நண்பா்கள் போராடி அவரது உடலை மீட்டனா். தகவல் அறிந்த ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com