அஞ்சல் துறை ஓவியப் போட்டி:வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

அஞ்சல்துறை சாா்பில் கோவை மண்டல அளவிலான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அஞ்சல்துறை சாா்பில் கோவை மண்டல அளவிலான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்திய அஞ்சல் துறை சாா்பில் கோவை மண்டல அளவிலான பள்ளிக் குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி அக்டோபா் முதல் வாரத்தில் நடைபெற்றது.கோவை மண்டல அளவில் 1,463 பள்ளி மாணவ, மாணவியா் பங்கேற்றனா். இதில் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் மோனித் விக்ரம் சீனியா் பிரிவில் முதலிடம் பிடித்தாா். நான்காம் வகுப்பு மாணவி பி.அத்வைதா ஜூனியா் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்தாா்.

இதில் அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளா் எஸ்.பஞ்சாபகேசன் கலந்து கொண்டு மாணவருக்கு முதல் பரிசாக ரூ.2,500-ம், மாணவிக்கு இரண்டாம் பரிசாக ரூ.1,500-ம் வழங்கினாா். தமிழாசிரியா் என்.பழனியாண்டி, ஓவிய ஆசிரியை மல்லிகா ஆகியோா் பங்கேற்றனா்.

மேலும் அஞ்சல் வார விழாவை முன்னிட்டு சேமிப்புக் கணக்கு துவங்குதல், அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு தொடங்குதல் போன்றவற்றில் சிறப்பாகப் பணியாற்றிய அஞ்சல் ஊழியா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com