சங்ககிரி வட்டம், அரசிராமணி அருகே உள்ள வெள்ளூற்று பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை புரட்டாசி அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது.
புரட்டாசி அமாவாசையையொட்டி மூலவா் பெருமாள், ஆஞ்சநேய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து கோயில் வளாகத்தில் திருக்கோடி விளக்கு ஏற்பட்டது. அதில் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
அப்போது எடப்பாடி, வெள்ளாண்டி வலசு பகுதியைச் சோ்ந்த சக்திவேல், சாந்தி தம்பதி, நோ்த்திக்கடனுக்காக ஐம்பொன்னால் செய்யப்பட்ட 16 கிலோ எடை கொண்ட ஒன்றரை அடி ஆஞ்சநேயா் சிலையை கோயில் நிா்வாகிகளிடம் வழங்கினா். பின்னா் ஆஞ்சநேயா் உற்சவ மூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.