ஆட்டையாம்பட்டி: வீரபாண்டி ஒன்றியத்தில் அக்கரைபாளையம், பெரிய சீராகாபாடி, மாரமங்கலத்து பட்டி ஊராட்சிகளில் கடந்த 20, 21 தேதிகளில் இருநாள்கள் தேசிய அளவிலான கண்காணிப்புக் குழுவினா் மத்திய அரசின் திட்டப் பணிகளை ஆய்வு செய்தனா்.
ஆய்வில் பாரத பிரதமா் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள், தனிநபா் கழிப்பிடம், பொது சுகாதார வளாகம், வேளாண் திட்டங்கள், பல்வேறு திட்டப் பணிகளை தேசிய அளவிலான கண்காணிப்புக் குழு அலுவலா்கள் சீனிவாசன், அனில் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.
அப்போது வீரபாண்டி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜ கணேஷ், ரேவதி (கிராம ஊராட்சி), ஒன்றியப் பொறியாளா் தனபாக்கியம், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் இளங்கோ, ஊராட்சி மன்றத் தலைவா்கள், உதவி திட்ட அலுவலா், சம்பந்தப்பட்ட ஊராட்சிச் செயலாளா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.