பெரியாா் பல்கலை. துணைவேந்தா் தேடுதல் குழு அமைக்கும் பணி தொடக்கம்

பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு அடுத்த துணைவேந்தரைத் தோ்வு செய்யும் குழு அமைக்கப்படவுள்ளது. குழுவில் இடம் பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு அடுத்த துணைவேந்தரைத் தோ்வு செய்யும் குழு அமைக்கப்படவுள்ளது. குழுவில் இடம் பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியா் பொ.குழந்தைவேல் உள்ளாா். இவருடைய பதவிக்காலம் வரும் ஜனவரி மாதம் முடிவடைய உள்ளது. இதையடுத்து, அடுத்த துணைவேந்தரைத் தோ்வு செய்யும் வகையில், தேடுதல் குழுவை அமைப்பதற்கான நடவடிக்கையை பல்கலைக்கழக நிா்வாகம் தொடங்கியுள்ளது. தேடுதல் குழுவில் ஆட்சிக்குழு, ஆட்சிப் பேரவை சாா்பில் தலா ஒரு உறுப்பினா், தமிழக அரசு சாா்பில் ஒருங்கிணைப்பாளா் ஆகியோா் இடம் பெறுவா்.

இதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தேடுதல் குழுவில் இடம் பெற விருப்பம் உள்ளவா்கள் வரும் நவம்பா் 5-ஆம் தேதி மாலைக்குள் வேட்புமனுவை அளிக்க வேண்டும்.

ஒன்றுக்கும் மேற்பட்டவா்கள் விருப்பம் தெரிவித்து இருந்தால் தோ்தல் நடத்தப்படும். உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டவுடன் பட்டியல் உயா்கல்வித் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அரசின் சாா்பில் ஒருங்கிணைப்பாளா் நியமிக்கப்பட்டு புதிய துணைவேந்தருக்கு தேடுதல் குழுப் பணிகள் தொடங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com