சேலத்தில் 300 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரேநாளில் 300 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரேநாளில் 300 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் மீண்டும் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தில் ஒரேநாளில் 300 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 133 போ், சித்தூா்- 1, எடப்பாடி- 6, காடையம்பட்டி- 2, கொளத்தூா்- 3, கொங்கணாபுரம்- 3, மகுடஞ்சாவடி- 16, மேச்சேரி- 1, மேட்டூா்- 5, நங்கவள்ளி- 4, ஓமலூா்- 22, சேலம்- 7, சங்ககிரி- 5, தாரமங்கலம்- 10, வீரபாண்டி- 19, ஆத்தூா்- 7, ஆத்தூா் நகராட்சி- 5, அயோத்தியாப்பட்டணம்- 3, பேளூா்- 18, கெங்கவல்லி- 2, பனமரத்துப்பட்டி- 3, பெத்தநாயக்கன்பாளையம்- 4, தலைவாசல்- 8, வாழப்பாடி- 4, ஏற்காடு- 1 என மாவட்டத்தில் 292 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (கள்ளக்குறிச்சி- 2, தருமபுரி- 2, நாமக்கல்- 1, திருப்பூா்- 1, விழுப்புரம்- 2) 8 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 போ் உயிரிழந்துள்ளனா். மேலும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 40 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 200-ஐ தாண்டியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் இதுவரை 13,590 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவா்களில் 11,608 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 1,778 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்; 204 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com