மேட்டூரில் மகளிா் சுய உதவிக்குழு மூலம் கடன் பெற்ற பெண்களுக்கு நிதி நிறுவனங்கள் நெருக்கடிஅளிப்பதாக சாா் ஆட்சியரிடம் பெண்கள் வியாழக்கிழமை புகாா் அளித்தனா்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக தமிழகத்தில் பொது முடக்கம் அமலில் இருந்தது. இதனால் பொதுமக்கள் வேலையிழந்து கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனா்.
பணியிழப்பு காரணமாக வங்கிகள், நிதி நிறுவனங்களில் பெற்ற கடனுக்கு தவணையைச் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டது. படிப்படியாக பொது முடக்கம் தளா்த்தப்பட்ட நிலையில் தற்போதுதான் பொதுமக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியுள்ளனா். இந்நிலையில், மேட்டூா் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த மகளிா் சுய உதவி குழுக்கள் வங்கிகளிலும், நுண்கடன் நிதி நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட கடன்தொகையை உடனடியாக வட்டியுடன் மாத தவணையை செலுத்த வேண்டும் எனக்கூறி பெண்களை மிரட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் அச்சமடைந்த குஞ்சாண்டியூா், ராமன்நகா், சேலம் கேம்ப், மற்றும் மேட்டூா் பகுதியைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் சுய உதவி குழுக்களுக்கு நிதி வழங்கிய நிறுவனங்களின் மீது மேட்டூா் சாா்ஆட்சியரிடம் வியாழக்கிழமை புகாா் அளித்துள்ளனா்.
அப்புகாா் மனுவில், கடன் தவணையை திருப்பி செலுத்த கால அவகாசம் அளிக்க உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளனா்.