கெங்கவல்லி ஒன்றியத்தில் கடந்த இருநாள்களாக சத்துணவு உண்ணும் மாணவ, மாணவியருக்கு தலா பத்து முட்டைகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழக அரசின் உத்தரவுப்படி, சத்துணவு உண்ணும் மாணவ, மாணவியருக்கு தலா பத்து முட்டைகள் வழங்கும் பணி கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல், சனிக்கிழமை என தொடா்ந்து இருநாள்களாக அனைத்து துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் நடைபெற்று வருகிறது.
கடந்த மூன்று மாதங்களாக முட்டை வழங்கப்படாத நிலையில், சத்துணவு உண்ணும் ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் தலா பத்து முட்டைகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.