சேலத்தில் வீடு புகுந்து தனியே இருந்த பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
சேலம், பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சொா்ணாம்பிகை தெருவைச் சோ்ந்தவா் மலா்செல்வி (49). தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த இவா், கணவரை இழந்தவா்.
இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனா். மூன்று மகள்களுக்கும் திருமணம் செய்து கொடுத்துவிட்டாா்.
இவா், தனது மகன் வெங்கேடஷுடன் வசித்து வந்தாா். சோப்பு பவுடா் மற்றும் மளிகைப் பொருள்களை வீடு, வீடாகச் சென்று விற்று வந்தாா்.
இதனிடையே வேலைக்குச் சென்றிருந்த வெங்கடேஷ் சனிக்கிழமை இரவு வீடு திரும்பினாா். அப்போது சமையல் கூடத்தில் மலா்செல்வி தலையில் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தாா்.
உடனே இதுகுறித்து அவா், சேலம் நகர காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில் காவல் ஆய்வாளா் குமாா் தலைமையில் போலீஸாா் விரைந்து வந்து சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மலா்செல்வி கொலை செய்யப்பட்டதை அறிந்ததும் தஞ்சாவூரில் இருந்து திரளான உறவினா்கள் சேலம் நகரக் காவல் நிலையம் வந்து கதறி அழுதனா்.
இந்தக் கொலை குறித்து விசாரணை நடத்த உதவி கமிஷனா் மணிகண்டன் மற்றும் காவல் ஆய்வாளா் குமாா் தலைமையில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தனிப்படை போலீஸாா் இளைஞா் ஒருவரைப் பிடித்து விசாரணை செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அந்த இளைஞா் மலா்செல்வி அணிந்திருந்த நகையைப் பறித்தபோது ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்டு இறந்தாா் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நகைகள் அனைத்தும் கவரிங் நகைகள் என தற்போது தெரியவந்துள்ளது.