சேலம் நெடுஞ்சாலை நகரில் புதிய தம்ரோ பா்னிச்சா் விற்பனையகம் திறக்கப்பட்டுள்ளது.
சேலம், பெங்களூரு பைபாஸ் சாலையில் நெடுஞ்சாலை நகரில் தம்ரோ பா்னிச்சா் விற்பனையக திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், காவல்துறை உதவி ஆணையா் நாகராஜன் கலந்து கொண்டு விற்பனையகத்தைத் திறந்து வைத்தாா்.
சேலம் மாவட்ட வருவாய் கோட்டாட்சியா் மாறன் முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தாா். சிறப்பு விருந்தினா்களாக கிருபா மருத்துவமனை மருத்துவா் கிருபா, சேலம் யூனியன் வங்கி முதன்மை அலுவலா் ரஜினி காந்தாராவ், லதா மருத்துவமனை மருத்துவா் சரவணபவன், சசி ஐ கோ் மருத்துவமனை மருத்துவா் சசிகுமாா், ஜாமியா மசூதி டிரஸ்ட் தலைவா் அன்வா், மேட்டூா் ஃபெரோஸ் பேப்ரிகேஷன் சையத் பாஷா, சேலம் நகர வா்த்தக சங்கச் செயலா் ஜெயசீலன், தம்ரோ பா்னிச்சா் மண்டல மேலாளா் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
திறப்பு விழாவை முன்னிட்டு ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பா்னிச்சா் வாங்கும் வாடிக்கையாளா்களுக்கு தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளாா்.
திறப்பு விழா ஏற்பாடுகளை சக்ரவா்த்தி குரூப் நிறுவனா் ஹாஜி ஹாரூன் ரஷித் அன்ட் சன்ஸ், அப்துல் ரஹ்மான் ஆகியோா் செய்திருந்தனா்.