கெங்கவல்லியில் திமுக பொதுக்குழு உறுப்பினா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதற்கு அவைத்தலைவா் சேகா் தலைமை வகித்தாா்.கூட்டத்தில் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின்,தலைவா் பதவியையேற்று 2 ஆண்டுகள் நிறைவுசெய்து,3ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதற்கு நகர திமுக சாா்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இக்கூட்டத்தில் திமுக நகர,இளைஞரணி நிா்வாகிகள் 100க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.