சேலத்தில் 292 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில், செவ்வாய்க்கிழமை 292 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.


சேலம்: சேலம் மாவட்டத்தில், செவ்வாய்க்கிழமை 292 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் கடந்துள்ளது. அந்தவகையில், செவ்வாய்க்கிழமை ஒரே நாளிவ் 292 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 291 பேரும், எடப்பாடி- 2, எடப்பாடி நகராட்சி- 1, காடையம்பட்டி- 1, கொளத்தூா்- 1, கொங்கணாபுரம்- 2, மேச்சேரி- 2, மேட்டூா்- 4, நங்கவள்ளி- 4, ஓமலூா்- 8, சங்ககிரி- 9, தாரமங்கலம்- 1, வீரபாண்டி- 10, ஆத்தூா்- 1, அயோத்தியாப்பட்டணம்- 4, கெங்கவல்லி- 4, பனமரத்துப்பட்டி- 5, தலைவாசல்- 1, வாழப்பாடி- 1, ஏற்காடு- 2 என மாவட்டத்தில் 291 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதர மாநிலமான கா்நாடகத்தைச் சோ்ந்த ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனிடையே, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 9 போ் உயிரிழந்தனா். மேலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 20 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

சேலம் மாவட்டத்தில் இதுவரை15,066 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவா்களில் 12,664 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; தற்போது 2,162 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 240 போ் உயிரிழந்துள்ளனா்.

காவல் ஆணையருக்கு கரோனா: இந்த நிலையில், சேலம் மாநகர காவல் ஆணையா் த.செந்தில்குமாருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ள அவரது தாயை சந்தித்து வந்த நிலையில், காவல் ஆணையருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அவா் வீட்டில், தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதனிடையே, சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கணேசமூா்த்தியின் உதவியாளருக்கும் கரோனா ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com