ஓமலூா் தீயணைப்புத்துறையினா் சாா்பில் மழைக் காலம் மற்றும் பேரிடா் காலங்களில் தற்காத்துக் கொள்வது குறித்த ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே முத்துநாயக்கன்பட்டி ஏரியில் மழைக் காலங்களில் தற்காத்துக் கொள்வது தொடா்பான ஒத்திகையை ஓமலூா் தீயணைப்புத்துறையினா் நடத்தி காட்டினா்.
தண்ணீரில் மூழ்கி தத்தளிக்கும்போது, கிடைக்கும் உபகரணங்களை வைத்து தற்காத்துக் கொள்வது குறித்த செய்முறை விளக்கம் தத்ரூபமாக அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு அலுவலா் ரமேஷ்பாபு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனா்.