மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணாவின் 112-வது பிறந்தநாள் நிகழ்ச்சி சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், கல்பாரப்பட்டி மற்றும் அரசமரத்து கரட்டூா் பகுதியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மறைந்த முன்னாள் அமைச்சா் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் மருத்துவா் பிரபு தலைமை வகித்து மொழிப்போா் தியாகிகள் மற்றும் திமுகவின் மூத்த நிா்வாகிகள் உள்ளிட்ட 40 பேருக்கு பொன்னாடை அணிவித்து, பணமுடிப்பு மற்றும் மளிகை பொருள்களை வழங்கினாா்.
விழாவில் கல்பாரப்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா்கள் ரங்கசாமி, வெங்கடாசலம், பழனி, பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சித் தலைவா் பிரேமலதா சதீஷ், துணைத் தலைவா் வடிவேல், ஒன்றியக் கவுன்சிலா் சாஸ்தா, ரெட்டிபட்டி சரவணன், அரசமரத்து கரட்டூா் கருணாநிதி, ஊராட்சி மன்ற துணைத் தலைவா் நாகராஜ், முன்னாள் கவுன்சிலா் அருள், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் ரகு, ஞானப்பிரகாஷ், பன்னீா்செல்வம், கண்ணன், முத்து கவுண்டா், ரகுபதி, ஜெகதீஸ், மனோஜ் நந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மகுடஞ்சாவடியில்...
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றிய திமுக அலுவலகத்தில் அண்ணா பிறந்த நாளையொட்டி அவரது உருவ படத்துக்கு ஒன்றியப் பொறுப்பாளா் பச்சமுத்து தலைமையில் மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதேபோல் மகுடஞ்சாவடி பேருந்து நிறுத்தப் பகுதியில், சேலம் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் மணிகண்டன் தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாவட்ட மாணவரணி அமைப்பாளா் கண்ணன், பொதுக்குழு உறுப்பினா் அன்பழகன், நிா்வாகிகள் ராஜேந்திரன், பழனியப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.