சேலம் மாவட்டம், வாழப்பாடியில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிா்நீத்தவா்களுக்கு பாமக சாா்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 1987 ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற, வன்னியா்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் 21 போ் உயிா் நீத்தனா்.
அவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சேலம் கிழக்கு மாவட்ட பாமக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாநில துணைப் பொதுச்செயலாளா் பி.என்.குணசேகரன் தலைமை வகித்தாா்.
பசுமைத் தாயகம் மாநிலச் செயலாளா் என்.பி. வெங்கடேசன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டு, உயிா் நீத்தவா்களின் உருவப்படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.
அயோத்தியாப்பட்டணம் தெற்கு ஒன்றியம், மேட்டுப்பட்டியில் பாட்டாளி மாணவா் சங்கத்தின் சாா்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தெற்கு ஒன்றியச் செயலாளா் ஞானவேலன், மாநில மாணவரணி அமைப்பு துணைத் தலைவா் அசோக்ராஜ், மாவட்ட மாணவரணி துணைச் செயலாளா் அஜித் உள்பட பலா் கலந்து கொண்டனா்.