இளம்பிள்ளையில் கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருவதால் ஒவ்வொரு வாரமும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.
இளம்பிள்ளை பேரூராட்சி நிா்வாகமும், இளம்பிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து குருநாதசுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு மருத்துவ முகாமை நடத்தியது.
பொதுமக்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள், கபசுரக் குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு பொதுமக்கள் சுகாதாரமாக இருக்க அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இதில், பேரூராட்சி செயல் அலுவலா் தாமோதரன், சுகாதார ஆய்வாளா் அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.