நங்கவள்ளி ஒன்றிய திமுக சாா்பில் இணையவழி உறுப்பினா்கள் சோ்க்கை விளம்பர ஊா்தி பயணம் வியாழக்கிழமை துவங்கியது.
‘எல்லோரும் நம்முடன்’ என்ற இணையவழி உறுப்பினா் சோ்க்கையை அண்ணா பிறந்தநாளான கடந்த 15ஆம் தேதி திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தாா்.
அதையடுத்து சேலம், மேற்கு மாவட்டம் நங்கவள்ளி ஒன்றியம், குஞ்சாண்டியூரில் இணையவழி உறுப்பினா் சோ்க்கை மற்றும் எல்இடி ஒளித்திரை பொறுத்தப்பட்ட பிரசார ஊா்திப் பயணத்தை சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி வியாழக்கிழமை கொடியசைத்துத் துவக்கி வைத்தாா்.
நிகழ்ச்சிக்கு சேலம் மேற்கு மாவட்ட திமுக அவைத் தலைவா் பா.கோபால், நங்கவள்ளி ஒன்றியச் செயலாளா் கே.எம். ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நங்கவள்ளி ஒன்றியம் முழுவதும் ஒரேநாளில் 156 வாக்குச்சாவடிகளில் உறுப்பினா் சோ்க்கை நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்டப் பொருளாளா் பாலகிருஷ்ணன், துணைச் செயலாளா் கொடியரசி கீதா, மாவட்ட இளைஞரணித் துணை அமைப்பாளா் கமலக்கண்ணன், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் ராஜேஸ், பேரூா் செயலாளா்கள் அல்லிமுத்து, பொன்னுவேல், துணைச் செயலாளா் முருகன், மாவட்டப் பிரதிநிதி இ.கே.தமிழரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.