ஏற்காடு, எஸ்டி தனி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் சி.தமிழ்ச்செல்வன், நெய்யமலை கிராமங்களை ஒருங்கிணைத்து தனி ஊராட்சி அமைக்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்து, இப்பகுதி மக்களிடம் ஆதரவு திரட்டினாா்.
அவா், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், இடையப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நெய்யமலை, அக்கரைப்பட்டி, ஆலாங்கடை ஆகிய கிராமங்களில் மலைவாழ் பழங்குடியின மக்களை, புதன்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினாா். அப்போது, தன்னை வெற்றி பெறச் செய்தால், நெய்யமலை கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான தனி ஊராட்சி, துணை சுகாதார நிலையம், சமுதாயக்கூடம் அமைத்தல் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் முழுமையாக நிறைவேற்றித் தருவேன் என வாக்குறுதி அளித்தாா். கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.