சேலத்தில் விசிகவினா் ஆா்ப்பாட்டம்

அரக்கோணம் இரட்டை கொலை சம்பவத்தைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரக்கோணம் இரட்டை கொலை சம்பவத்தைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் தோ்தல் தகராறு தொடா்பாக நடைபெற்ற இரட்டைக் கொலை சம்பவத்தைக் கண்டித்து, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகி இமயவரம்பன் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலாளா்கள் வசந்த், அய்யாவு, மாநகர பொருளாளா் காஜா மொய்தீன், வழக்குரைஞா் சசிகுமாா் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com