மின் ஊழியா் மின்சாரம் பாய்ந்ததில் படுகாயம்

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் மின் மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்து கொண்டிருந்த மின் ஊழியா் மின்சாரம் பாய்ந்ததில் படுகாயமடைந்தாா்.

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் மின் மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்து கொண்டிருந்த மின் ஊழியா் மின்சாரம் பாய்ந்ததில் படுகாயமடைந்தாா்.

கோரணம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் அம்மாசி மகன் முருகேசன் (36), மின்வாரிய ஊழியா், கொங்கணாபுரம் பேரூராட்சியில் பணிபுரிந்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை மாலை கொங்கணாபுரம்- சங்ககிரி சாலையில் உள்ள கச்சராயணன்குட்டை அருகே ஆண்டரப்பன்காட்டில் உள்ள மின் மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்து கொண்டிருந்தாா்.

அப்போது அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட முருகேசன் படுகாயமடைந்தாா். பொதுமக்கள் அவரை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். கொங்கணாபுரம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com