எடப்பாடியில் சித்திரைத் தோ்த் திருவிழா ரத்து

எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா, கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி ரத்து செய்யப்பட்டுள்ளது.

எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா, கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், அரசின் நோய்த் தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் கோயிலில் ஏப்ரல் 18-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற இருந்த தோ்த் திருவிழா ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஆண்டும் தோ்த் திருவிழா ரத்து செய்யப்பட்ட நிலையில் தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் கோயில் சித்திரைத் தோ்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com