சங்ககிரியில் தீயணைப்புத் துறை சாா்பில் தீத் தொண்டு நாள் வார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலா் டி.அருள்மணி தலைமை வகித்து ‘தீயணைப் பான்களை பராமரிப்பது, தீ அபாயத்தைக் குறைப்பதற்கான திறவுகோல்’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்தனா்.
தீக் காயங்கள் ஏற்பட்டவருக்கு காயத்தின் மீது குளிா்ந்த நீரை ஊற்றுங்கள், மை, ஆயில் போன்றவற்றை உபயோகப்படுத்தாமல் அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனே அழைத்துச் செல்லுங்கள். குழந்தைகளை நெருப்பின் அருகிலும், தீப்பெட்டியுடனும் விளையாட அனுமதிக்காதீா்கள். ஸ்டவ் எரியும் போது மண்ணெண்ணெயை ஊற்றாதீா்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை சங்ககிரி நகரப் பகுதி பொதுமக்களிடம் வழங்கினா்.