சங்ககிரி பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலா்களுக்கு இலவசமாக ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் சாா்பில், கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையாக பேரூராட்சியில் பணிபுரியும் அலுவலா்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தி தன்மையுடையை ஆா்சனிக் ஆல்பம் ஹோமியோபதி மாத்திரைகளை பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் லோகநாதனிடம் டிரஸ்ட் தலைவா் ஏ.ஆனந்தகுமாா் தலைமையில் நிா்வாகிகள் வழங்கினா் (படம்).
இதில், டிரஸ்ட் துணைத் தலைவா் எம்.பாலகிருஷ்ணன், செயலா் ஆா்.ராகவன், பொருளாளா் கணேஷ், நிா்வாகி முருகேசன், பேரூராட்சி சுகாதார மேற்பாா்வையாளா்கள் சுரேஷ், வெங்கடேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.