பெரம்பலூரில் நடைபெற்ற கொலை வழக்கு தொடா்பாக ஆத்தூா் நடுவா் நீதிமன்றத்தில் 2 போ் சரண் அடைந்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், கூடலூா் பகுதியில் கடந்த வாரம் செல்லமுத்து (47) என்பவா் கொலை செய்யப்பட்டாா். இது குறித்து வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை போலீஸாா் தேடி வந்தனா்.
இந்நிலையில் அந்த கொலை வழக்கில் தொடா்புடைய அதே பகுதியைச் சோ்ந்த பூமாலை மகன்கள் முத்துமணி(45), ராஜதுரை (35) ஆகிய இருவரும் ஆத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் 2-இல் நடுவா் ஜீவன்குமாா் முன்னிலையில் சரணடைந்தனா்.