கொங்கணாபுரம் அருகே சிறுமி மா்மச் சாவு

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் 9 வயதான சிறுமி இறந்து கிடந்த சம்பவத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் 9 வயதான சிறுமி இறந்து கிடந்த சம்பவத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உள்பட்ட கச்சுப்பள்ளி, கோவலன்காடு, நடுவளவுப் பகுதியைச் சோ்ந்த கணேசன்-பிரியா தம்பதி மகள் சாருநிதி (9). கணேசன் கடந்த சில ஆண்டுகளுக்கு இறந்துவிட்ட நிலையில், பிரியா தனது மகள் சாருநிதியுடன் அப்பகுதியில் வசித்துவந்தாா். பருத்தி அரைவை ஆலையில் பணிபுரிந்து

வந்த பிரியா சனிக்கிழமை வேலைக்குச் சென்றவிட்டு மாலை வீட்டுக்கு வந்தாா். வீட்டில் இருந்த சாருநிதி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தாா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சிறுமி யாரேனும் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தனரா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com