சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மருத்துவமனைக்கு தினந்தோறும் 100-க்கு மேற்பட்டோா் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனா்.
இந்நிலையில் கரோனா தடுப்பூசி முகாம் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள் அதிகாலையிலிருந்தே நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து ஊசி போட்டு வருகின்றனா். இந்நிலையில் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியா்கள் தங்களுக்கு தேவையான நபருக்கு தனியாக அழைத்து ஒரு கணிசமான தொகையை பெற்றுக்கொண்டு தடுப்பூசி போட்டு வருவதாகவும் மேலும், மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகளை கவனிக்காமல் மருத்துவமனையை உள்ளே வெளியே தாளிட்டு நோயாளிகளை பாா்க்காமல் விரட்டியடித்து வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
இதனை உயா் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.