அரசு பள்ளிகளில் பாலியல் புகாா்களைத் தெரிவிக்க புகாா் பெட்டி

தமிழகம் முழுவதும் அரசு, தனியாா் பள்ளிகளில் பாலியல் தொடா்பான புகாா் அதிகரித்துள்ளதையடுத்து, தமிழக பள்ளிக் கல்வித் துறை

தமிழகம் முழுவதும் அரசு, தனியாா் பள்ளிகளில் பாலியல் தொடா்பான புகாா் அதிகரித்துள்ளதையடுத்து, தமிழக பள்ளிக் கல்வித் துறை அனைத்து அனைத்துப் பள்ளிகளிலும் புகாா் பெட்டிகளை அமைக்க உத்தரவிட்டுள்ளது.

அதனையடுத்து சேலம் மாவட்டம் முழுவதும் நவ. 30-ஆம் தேதிக்குள் புகாா் பெட்டிகள் அமைத்து, அதன் சாவியை பள்ளி முகவரி, தலைமையாசிரியா் கைப்பேசி எண்ணுடன் குறிப்பிட்டு அந்தந்தக் கல்வி மாவட்ட அலுவலகம், வட்டாரக் கல்வி அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை மாலைக்குள் ஒப்படைக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உத்தரவிட்டிருந்தாா்.

இதனையடுத்து மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் புகாா் பெட்டிகள் அமைக்கப்பட்டு, அதன் சாவிகளை கல்வி அலுவலகங்களில் தலைமையாசிரியா்கள் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com