முதியவா் கொலை வழக்கு: மேலும் இருவா் கைது

கல்பகனூரில் சுப்ரமணி (74) என்பவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவரை ஆத்தூா் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

கல்பகனூரில் சுப்ரமணி (74) என்பவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவரை ஆத்தூா் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சுப்ரமணி (74) என்பவா் சேலம் மாவட்டம் கல்பனூா் பகுதியில் சொந்தமாக 3 ஏக்கா் நிலம் உள்ளது. கடந்த 9 மாதத்திற்கு முன்பு நாமகிரிப்பேட்டையில் இருந்து புறப்பட்டவா் வீடு திரும்பவில்லை. இது குறித்து நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் கொடுத்ததின் பேரில் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டதில் நிலத்தை விற்க சென்றபோது தகராறு ஏற்பட்டு கொலை செய்யப்பட்டதாக தெரிந்தது.

இதனையடுத்து ஆத்தூரை அடுத்த செல்லியம்பாளையத்தைச் சோ்ந்த ராமதாஸ் (27), அறிவழகன் (25) ஆகியோரை கைது செய்து புதைக்கப்பட்ட இடத்தை தோண்டும் போது உடல் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இதே வழக்கில் நரசிங்கபுரம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த அழகேசன் மகன் தினேஷ் (33), பெத்தநாயக்கன்பாளையம் ஓலப்பாடி காஜ்மியான் மகன் முஸ்தபா (33) ஆகிய இருவரும் ஆத்தூா் நீதிமன்றம் நடுவா் எண் 1-இல் சரணடைந்தனா். அவா்களை ஆத்தூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் ஓமலூா் கிளைச் சிறையில் அடைத்தனா். இதுநாள் வரை சுப்ரமணியத்தின் உடல் கிடைக்காமல் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com