ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அண்ணா பூங்காவில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அண்ணா பூங்காவில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவுதினத்தை ஒட்டி, சேலம் அண்ணா பூங்காவில் உள்ள எம்ஜிஆா், ஜெயலலிதா மணிமண்டபத்தில், ஜெயலலிதா சிலைக்கு மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் மாலை அணிவித்து மலா் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாநகா் மாவட்ட செயலாளா் ஜி.வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக அவைத் தலைவா் வி.பன்னீா்செல்வம், சேலம் தெற்கு தொகுதி எம்எல்ஏ பாலசுப்ரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் எம்.கே.செல்வராஜு, ஏ.பி.சக்திவேல், ரவிச்சந்திரன், பகுதி செயலாளா்கள், வாா்டு செயலாளா்கள், தொண்டா்கள் என 800-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். சேலம் மாநகரில் உள்ள 60 கோட்டங்களிலும் ஜெயலலிதா உருவப் படம் வைத்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com