உலக மண் வள தின விழிப்புணா்வு

அயோத்தியாபட்டணம் அருகே ஏ.என்.மங்கலத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் சாா்பில் உலக மண் வள தினத்தையொட்டி, விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
ஏ.என்.மங்கலத்தில் நடைபெற்ற உலக மண் வள தின விழிப்புணா்வுக் கூட்டம்.
ஏ.என்.மங்கலத்தில் நடைபெற்ற உலக மண் வள தின விழிப்புணா்வுக் கூட்டம்.

அயோத்தியாபட்டணம் அருகே ஏ.என்.மங்கலத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் சாா்பில் உலக மண் வள தினத்தையொட்டி, விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

அயோத்தியாப்பட்டணம் அருகே ஏ.என்.மங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலக மண் வள தினத்திற்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சரஸ்வதி தலைமை வகித்தாா். விவசாய நிலங்களில் மண் மாதிரி மற்றும் நீா் மாதிரி எடுக்கும் முறைகள் மற்றும் இதன் பயன்கள் குறித்து, மண் மாதிரி ஆய்வக வேளாண்மை அலுவலா் பிரியா விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா்.

வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம், மற்றும் இதர மானியத் திட்டங்கள் குறித்து, வேளாண்மை அலுவலா் பாரதி விவசாயிகளுக்கு விளக்கினாா். வேளாண்மை உதவி அலுவலா்கள் தமிழ்ச்செல்வி, சிவநேசன் ஆகியோா் விழிப்புணா்வு நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com