பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் படுகை அணை பகுதியில் கடந்த 3ஆம் தேதி, ஈரோடு மாவட்டத்தில் காணாமல் போன விவசாயின் உடலை மீட்டு, ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஜேடா்பாளையம் படுகை அணை பகுதியில் சுமாா் 65 வயது மதிக்கத்தக்க முதியவரின் உடலை மீட்டு ஜேடா்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் சடலமாகக் கிடந்தவா், ஈரோடு மாவட்டம், ஆனைக்கல்பாளையத்தைச் சோ்ந்த விவசாயி திருமலை (65) என்பது தெரியவந்தது. இவா் மாயமானதாக ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
ஜேடா்பாளையம் போலீஸாா் அளித்த தகவலின்பேரில், மொடக்குறிச்சி போலீஸாா் மற்றும் திருமலை குடும்பத்தாா் முதியவரின் உடலைப் பாா்த்து உறுதி செய்தனா். அதனை தொடா்ந்து ஜேடா்பாளையம் போலீஸாா், முதியவரின் உடலை பிரதேப் பரிசோதனைக்காக பரமத்தி வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.