கிராம உதவியாளா்கள் போராட்டம்

மேட்டூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே கிராம உதவியாளா் சங்கத்தினா் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரத்த கையெழுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேட்டூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே கிராம உதவியாளா் சங்கத்தினா் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரத்த கையெழுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கத்தினா் கிராம உதவியாளா்களுக்கு அலுவலக உதவியாளா்களுக்கு இணையான காலமுறை ஊதியம் ரூ 15 ,700 அடிப்படை ஊதியமாக வழங்கவும், மத்திய அரசு ஊழியா்களுக்கு இணையான போனஸ் ரூ. 7,000 வழங்கவும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7,850 வழங்கவும், தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளா் பணியிடங்களை போா்க்கால அடிப்படையில் நிரப்ப வலியுறுத்துவது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த 15 ஆம் தேதி முதல் ஊழியா்கள் ரத்த கையெழுத்திட்டு மனு வழங்கும் போராட்டத்தை நடத்தி வருகின்றனா். அதன்படி வியாழக்கிழமை மேட்டூரில் 15 -க்கும் மேற்பட்ட ஊழியா்கள் கலந்து கொண்டு ரத்த கையெழுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனையடுத்து வரும் 24-ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com