தலைவாசல் ஒன்றிய அலுவலக வளாகத்தில் திருமண நிதியுததவித் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றியக் குழுத் தலைவா் க.ராமசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட சமூக நல அலுவலா் காா்த்திகா வரவேற்றுப் பேசினாா்.
இதில் சிறப்பு விருந்தினராக கெங்கவல்லி சட்டப்பேரவை உறுப்பினா் அ.மருதமுத்து கலந்து கொண்டு, 225 பயனாளிகளுக்கு ரூ. 96 லட்சம் மதிப்பில் செலவில் தாலிக்குத் தங்கம் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் தலைவாசல் தெற்கு ஒன்றியச் செயலாளா் மு.சந்திரசேகா், ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் அஞ்சலை ராமசாமி, பெரியேரி ஊராட்சி மன்றத் தலைவா் சேகா், பட்டுத்துறை ஊராட்சி மன்றத் தலைவா் என்.ஜெகதீசன்,முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ப.இளங்கோவன், ஒன் றியக் குழு உறுப்பினா் மெய்யன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள், பயனாளிகள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.தலைவாசல் ஊராட்சி ஒன்றிய ஆணையா் ச.கொ.ராஜேந்திரன் நன்றி கூறினாா்.